இந்தியாவையே உலுக்கியுள்ள காஜியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா (Harish Rana) என்ற இளைஞரின் கதை, தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கண்களையும் குளமாக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா, கடந்த 13 ஆண்டுகளாகக் கோமா (Coma) நிலையில் படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவரது குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மகனின் வேதனையைக் கண்டு பொறுக்க முடியாத அவரது பெற்றோர், அவருக்குக் கருணைக்கொலை (Euthanasia) செய்ய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஹரிஷ் ராணாவின் நிலையை உணர்ந்த உச்ச நீதிமன்றம், அவருக்குக் கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் இத்தகைய அனுமதி வழங்கப்படுவது மிக அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
நெகிழ்ச்சியான இறுதி விடைபெறுதல்:
அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, அவரது இல்லத்தில் நடந்த இறுதி விடைபெறுதல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஹரிஷ் ராணாவின் தாய், மகனின் நெற்றியில் திலகமிட்டு இறுதி மரியாதை செய்கிறார்.
கண்ணீருடன் குடும்பத்தினர், "இப்போது உனது புதிய பயணத்தைத் தொடங்கு... அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு நிம்மதியாகப் போய் வா" என்று கூறி விடைபெறுகின்றனர்.
இந்த வீடியோவைப் பார்க்கும் எவரும் தங்களது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக உள்ளது.
வீடியோவை பார்வையிட Click

0 Comments