Subscribe Us

அஸ்வெசும பயனாளிகளுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசு! ஏப்ரல் மாத கொடுப்பனவு அதிரடி அதிகரிப்பு - முழு விபரம் இதோ.


இலங்கையில் உள்ள வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும (Aswesuma) நலன்புரி கொடுப்பனவுகளை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்காக மாத்திரம் கணிசமாக அதிகரிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சித்திரை புத்தாண்டு மற்றும் ரமலான் பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு விபரங்கள்: ஜனாதிபதியின் அறிவிப்பின்படி ஏப்ரல் மாதத்திற்கான புதிய கொடுப்பனவு விபரங்கள் பின்வருமாறு:

தற்போது 17,500 ரூபாயைப் பெற்றுவரும் பயனாளிகளுக்கு, இந்த மாதம் மாத்திரம் 25,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 10,000 ரூபாயைப் பெற்றுவரும் பயனாளிகளுக்கு, இந்த மாதம் மாத்திரம் 15,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு ஏப்ரல் மாதத்திற்காக மாத்திரம் (One-time increase) வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகைகள் வழமை போல பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

Newsfirst

Quick Info
Full Details
Closing Date
Status
More Jobs
Electricity Bill
Water Bill
GIF

Post a Comment

0 Comments