மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இன்று மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதற்கான சமிக்ஞையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு அல்லது நிகழ்வு ஒன்றில் ஈரானைக் கடுமையாகச் சாடிய டிரம்ப், "இந்த அறிவற்ற மனிதர்களுக்கு (deranged scmbags) இன்று என்ன நடக்கப்போகிறது என்பதைப் பாருங்கள்" (Watch what happens to these deranged scmbags today) எனத் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த ஆக்ரோஷமான பேச்சு, ஈரான் மீதான ஒரு பாரிய கூட்டு ராணுவத் தாக்குதல் இன்று நடைபெற வாய்ப்புள்ளதை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே ஈரான் மீதான 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) நடவடிக்கையின் போது அமெரிக்காவின் KC-135 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 6 பேர் பலியானதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேலியப் படைகளுடன் இணைந்து அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்தத் தொடர்ச்சியான மோதல்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30% வரை உயர்ந்துள்ளது.
தகவல் From X (GlobalUpdatwa24)

0 Comments