அல்லாஹ்வின் இல்லமாம் கஃபத்துல்லாஹ்வை தரிசிக்க வேண்டும் என்ற தீராத வேட்கையுடன், சிரியாவிலிருந்து தனது மிதிவண்டியிலேயே (Cycle) பயணத்தைத் தொடங்கிய ஒரு முதியவரின் கதை இன்று உலக முஸ்லிம்களின் கண்களைக் குளமாக்கியுள்ளது.
எவ்வித சொகுசு வசதிகளும் இன்றி, சுட்டெரிக்கும் வெயில் மற்றும் உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாது, ஓயாத இறை நம்பிக்கையை மட்டுமே துணையாகக் கொண்டு மைல் கணக்கில் அவர் பயணம் செய்தார். அவரது ஒவ்வொரு மிதிவண்டிச் சுழற்சியும் அல்லாஹ்வை நோக்கிய ஒரு திக்ராகவே அமைந்திருந்தது.
இறுதியில் அவர் புனித மக்கா நகரை அடைந்தபோது, இந்த உலக வாழ்விலிருந்து விடைபெற்றார். இது ஒரு சாதாரண மரணமல்ல;
மஸ்ஜித் அல்-ஹராமில் இலட்சக்கணக்கான ஹாஜிகளின் முன்னிலையில் ஜனாஸா தொழுகை நடைபெறுவது...
இது அல்லாஹ் தன் நேசத்திற்குரிய அடியார்களுக்கு மட்டுமே வழங்கும் ஒரு பெரும் பாக்கியமாகும்.
நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதை விட, நமது முடிவு எங்கே, எப்படி அமைகிறது என்பதே முக்கியம். அந்தச் சிரிய நாட்டு ஹாஜியின் புனிதப் பயணம் கஃபாவில் முடிவடைந்ததைப் போல, நமது முடிவும் ஈமானோடு அமைய நாம் பிரார்த்திப்போம்.
"நிச்சயமாகச் செயல்கள் அனைத்தும் அவற்றின் முடிவைப் பொறுத்தே அமைகின்றன." (ஸஹீஹுல் புகாரி)
அல்லாஹ் அந்த ஹாஜியின் ஹஜ்/உம்றா கடமைகளை ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சொர்க்கத்தை வழங்கியருள்வானாக. ஆமீன்! 🤍
எமது வட்சாப் குழுமத்தில் இணைந்து இது போன்ற பல விடயங்களை அறிந்து கொள்ளுங்கள் Click

0 Comments