Subscribe Us

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களுக்கு அவசர எச்சரிக்கை.

புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரிடமிருந்து தங்க நெக்லஸ் (Necklace) பறிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பெண் தனது மோட்டார் சைக்கிளில் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய நகைப்பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பெண்கள் பின்வரும் விடயங்களில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அல்லது வீதியோரமாக நடந்து செல்லும் போது, உங்களைப் பின் தொடரும் நபர்கள் குறித்து விழிப்புடன் இருங்கள்.

 நீண்ட தங்கச் சங்கிலிகள் அல்லது விலையுயர்ந்த ஆபரணங்களை அணியும்போது, அவை வெளியில் தெரியாதவாறு துப்பட்டா அல்லது மேலங்கியால் மறைத்துச் செல்லுங்கள்.

முடிந்தவரை ஆள் நடமாட்டம் குறைந்த அல்லது வெளிச்சம் குறைவான வீதிகளில் தனியாகப் பயணிப்பதைத் தவிர்க்கவும்.

இந்தச் சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர்.

CCTV VIdeo Click 

Quick Info
Full Details
Closing Date
Status
GIF

Post a Comment

0 Comments