கடந்த மூன்று வாரங்களாக மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வந்த பதற்றமான சூழல் தற்போது தணியத் தொடங்கியுள்ளது. ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வந்த வான்வழித் தாக்குதல்கள், சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலுக்கு இணங்க தற்போது மாற்றமடைந்துள்ளன.
ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அடுத்த 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வரும் சனிக்கிழமை ஈரானுடன் அமெரிக்கா நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. இதன் மூலம் ஒரு நிரந்தர உடன்படிக்கை எட்டப்படும் என ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான இந்தப் கடல் பாதை விரைவில் திறக்கப்படும் எனவும், அமெரிக்காவும் ஈரானும் இணைந்து இப்பகுதியைப் பாதுகாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஈரான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என உறுதி அளித்துள்ளது. இது ஒரு முழு அளவிலான போர் அல்ல, ஒரு தற்காலிக இராணுவ நடவடிக்கை மட்டுமே. விரைவில் ஒரு நல்ல தீர்வு எட்டப்படும்," என ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments