சவூதி அரேபியாவின் தென்மேற்கு எல்லையோரப் பகுதியான நஜ்ரான் (Najran) பிராந்தியத்தில் அமைந்துள்ள முக்கிய பாதுகாப்புத் தளம் மற்றும் இராணுவ விமான நிலையத்தைக் இலக்கு வைத்து ஹூதி அமைப்பினர் பல்லிஸ்டிக் (Ballistic) ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யெமன் எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சவூதி அரேபியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நஜ்ரான் பிராந்தியத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், பாதுகாப்பு தளத்தின் குறிப்பிட்ட பகுதிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து நஜ்ரான் பிராந்தியத்தில் அவசரநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாகப் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக யெமன் எல்லைப் பகுதியில் சவூதி தலைமையிலான கூட்டுப் படைகளுக்கும் ஹூதி அமைப்பினருக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து வந்தன. இதன் தொடர்ச்சியாகவே இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிராந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சமீபகாலமாக எல்லைப்புற இராணுவத் தளங்கள் மற்றும் வான்வழி மையங்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளன. இத்தாக்குதல் தொடர்பில் சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments